யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம்! அமைச்சரவை நேற்று ஒப்புதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம்! அமைச்சரவை நேற்று ஒப்புதல்..

யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 

2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, 

மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு