யாழ்.இருபாலையில் வாளை காட்டி அச்சுறுத்தி பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலியில் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலையில் வாளை காட்டி அச்சுறுத்தி பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலியில் மீட்பு!

யாழ்.இருபாலையில் வாளை காட்டி அச்சுறுத்தி பறித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் அச்சுவேலி பொலிஸாாரால் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த வெள்ளிக்கிழமை இருபாலை பகுதியில் வாளை காட்டி அச்சுறுத்தி 

பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளை வழிப்பறி செய்த கொள்ளை கும்பல் தொடர்பிலும், 

மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டனரா? என்பது தொடர்பிலும் அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸார் 

விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு