விஜயகலா மகேஷ்வரன் மற்றும் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஆசிரியர் - Editor I
விஜயகலா மகேஷ்வரன் மற்றும் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தேசிய பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் மற்றும் ஆதரவாளர்களை நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு,

இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்ததோடு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர், தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வைத்தியர்கள், புத்திஜீவிகள், விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார்.

குறித்த சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு