சொந்த மண்ணில் அதிக சதம்!! -சச்சின் சாதனையை முறியடித்த கோலி-

ஆசிரியர் - Editor II
சொந்த மண்ணில் அதிக சதம்!! -சச்சின் சாதனையை முறியடித்த கோலி-

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று  நடைபெற்றது. 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப் பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்கு 390 ஓட்டங்களை குவித்தது. 

இதில் விராட் கோலி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 166 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். 

இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46 ஆவது சதத்தை 452 ஆவது போட்டியில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259 ஆவது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். 

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு