பொலிஸாரின் நீர்தாரை பிரயோகத்தில் சம்போ போட்டு குளித்து மகிழ்ந்த பல்கலைகழக மாணவர்கள்!

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் நீர்தாரை பிரயோகத்தில் சம்போ போட்டு குளித்து மகிழ்ந்த பல்கலைகழக மாணவர்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தொிவித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டோர் மீது பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்த நிலையில் அதில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் குளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் மேற்படி பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். பேரணி யாழ்.நல்லூருக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டபோது பொலிஸார் - போராட்டக்காரர்கள் ஆகியோருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதன்காரணமாக போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. நீர்த்தாரையை பயன்படுத்தி சில மாணவர்கள் சம்பூ போட்டு குளித்து மகிழ்ந்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு