அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய இளைஞர்!! -மாணவி ஒருவரின் காளையையும் அடக்கி வென்ற பரிசை அவருக்கே வழங்கினார்-

ஆசிரியர் - Editor II
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய இளைஞர்!! -மாணவி ஒருவரின் காளையையும் அடக்கி வென்ற பரிசை அவருக்கே வழங்கினார்-

தமிழ்நாடு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 45 பேர் காயமடைந்துள்ளனர். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 ஆம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார். கார்த்தி 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடத்தில் உள்ளார். 

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பாடசாலை மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

பிற்பகல் நிலவரப்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 45 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு