ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது! உச்ச பாதுகாப்பில் நல்லூர் சுற்றாடல்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது! உச்ச பாதுகாப்பில் நல்லூர் சுற்றாடல்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளது. 

பல்கலைகழகத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி சேர்.பொன்.இராமநாதன் வீதியூடாக பேரணியாக நகர்ந்து வருகிறது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு