யாழ்.அச்சுவேலியில் உரிமைகோரப்படாத நிலையில் வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் உரிமைகோரப்படாத நிலையில் வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் மீட்பு!

யாழ்.அச்சுவேலி பகுதியில் உரிமைகோரப்படாத நிலையில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்று இரவு முதல் நின்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரமாக அநாதரவாக இருந்தது.

சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவலளித்தனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமை கோரப்படாத சாவியுடன் அச்சுவேலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு