மோதிரம் கழராததால் மோதிரத்தோடு விரலை அறுத்து சென்ற கொள்ளை கும்பல்! யாழ்.பருத்தித்துறையில் வீடு புகுந்து துணிகரம்..

ஆசிரியர் - Editor I
மோதிரம் கழராததால் மோதிரத்தோடு விரலை அறுத்து சென்ற கொள்ளை கும்பல்! யாழ்.பருத்தித்துறையில் வீடு புகுந்து துணிகரம்..

வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் மோதிரத்தை கழற்ற முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் மோதிரத்தோடு விரலை அறுத்துச் சென்ற சம்பவம் பருத்தித்துறை - தம்பசிட்டி பூவக்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பை சேர்ந்த பழனியாண்டி என்பவர் தம்பசிட்டியில் உள்ள அவருடைய சகோதரர் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய கையிலிருந்த மோதிரத்தை கழற்ற முயற்சித்துள்ளது. எனினும் அது கழற்ற முடியாமல் இருந்த நிலையில் மோதிரத்துடன் சேர்த்து விரலை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் காயமடை்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு