செல்வந்தர் ஆவதற்காக நரபலி பூஜை!! - 9 வயது சிறுவன் தலை வெட்டி கொலை-

ஆசிரியர் - Editor II
செல்வந்தர் ஆவதற்காக நரபலி பூஜை!! - 9 வயது சிறுவன் தலை வெட்டி கொலை-

இந்தியாவில் செல்வந்தர் ஆவதற்காக நடத்தப்பட்ட நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் குஜராத் மாநிலம் வல்சாத் வாபி நகருக்கு அருகில் உள்ள கால்வாயில் சிறுவன் ஒருவனின் சிதைந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்றும், டிசம்பர் 29 ஆம் திகதி சிறுவன் காணாமல் போனதை தொடர்ந்து, டிசம்பர் 30 ஆம் திகதி சில்வாஸ்ஸா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் செல்வந்த ஆவதற்காக கொடூரமான நபர்களால் நடத்தப்பட்ட நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் வார்லி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி சிறுவன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு, வீசப்படுவதற்கு முன்பு அவரது எச்சங்கள் சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு ஆண்கள் மற்றும் டீனேஜ் பையன் ஒருவனை பொலிஸார் கைது செய்து இருப்பதாக  தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு