முதல் லொட்டரி டிக்கெட்டில் பெண்ணுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!! -வாழ்க்கையை மாற்றிய சிறிய முடிவு-

ஆசிரியர் - Editor II
முதல் லொட்டரி டிக்கெட்டில் பெண்ணுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!! -வாழ்க்கையை மாற்றிய சிறிய முடிவு-

அமெரிக்கா நாட்டின் நார்த் கரோலினாவை சேர்ந்த ரெபேக்கா பவல் என்ற பெண் ஒருவர் தனது முதல் லொட்டரியிலேயே £123,500  தொகையை பரிசாக வென்றுள்ளார்.

அவர் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை லொட்டரியில் திடீரென கலந்து கொள்ள முடிவு செய்தது வாழ்நாளில் தனது முதல் லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

லொட்டரி வெற்றியை எதிர்பார்க்காத ரெபேக்கா, டிரா முடிந்த பல மணி நேரம் கழித்த பின்னரும் தனது டிக்கெட்டைச் சரிபார்க்கவில்லை, ஆனால் இறுதியாக அவள் முடிவுகளை பார்த்தப்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்றை தான் பெற்று இருப்பதை கண்டுபிடித்தார்.

வெற்றி பெற்ற ரெபேக்காவின் டிக்கெட்டுகள் நான்கு வெள்ளை பந்துகள் மற்றும் சிவப்பு நிற பவர்பால் ஆகியவற்றின்  $50,000 பரிசு எண்களுடன் பொறுத்தப்பட்டது. ஆனால் 3x பவர் ப்ளே மல்டிபிளையர் வெற்றிக்கு பின் பரிசு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் வரிகளுக்குப் பிறகு, ரெபேக்கா நம்பமுடியாத £87,890 ($106,876) வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

வெற்றி பின் நார்த் கரோலினா கல்வி லொட்டரியிடம் ரெபேக்கா பேசிய போது, "நான் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன். கடையில் இருந்த பெண்ணும் என்னிடம், 'உனக்கு தொடக்க நிலை அதிர்ஷ்டம் உண்மையிலேயே உள்ளது' என்று கூறினார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பரிசு தொகையை கொண்டு புதிய கார் மற்றும் புதிய வீட்டை வாங்க போவதாகவும் மீதி எஞ்சிய தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் ரேபேக்கா தெரிவித்துள்ளார்.

ரெபேக்கா தனது முதல் லொட்டரியிலேயே £123,500($150,000) வென்ற பிறகு, உலகின் அதிர்ஷ்டசாலி பெண் என்று அழைக்கப்படுகிறாள்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு