அறிமுக போட்டியில் அரைசதம்!! -சாதித்துக் காட்டிய நுவனிந்து பெர்னாண்டோ-

ஆசிரியர் - Editor II
அறிமுக போட்டியில் அரைசதம்!! -சாதித்துக் காட்டிய நுவனிந்து பெர்னாண்டோ-

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான நுவனிந்து பெர்னாண்டோ அரைசதம் விளாசினார்.

இலங்கை - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான குறித்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நுவனிந்து பெர்னாண்டோ களமிறங்கினார். இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

தான் சந்தித்த 62 ஆவது பந்தில் அவர் அரைசதம் அடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்திலேயே ஓட்டம் பெற முயலும் போது ரன் அவுட் ஆனார். நுவனிந்து பெர்னாண்டோ 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு