பாடசாலை மதிய உணவில் பாம்பு!! -வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்-

ஆசிரியர் - Editor II
பாடசாலை மதிய உணவில் பாம்பு!! -வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்-

இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலையில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்த போது சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

சாப்பாட்டில் பாம்பு இருந்ததை அறிந்த பெற்றோர், பாடசாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு