கே.ஜி.எப் - 3 குறித்து வெளியான தகவல்

ஆசிரியர் - Editor II
கே.ஜி.எப் - 3 குறித்து வெளியான தகவல்

கே.ஜி.எப் படத்தின் 3 அஅம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வதுபோல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். 

இதனால் 3 ஆம் பாகம் முழுவதும் கடலில்தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பதுபோல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில், கே.ஜி.எப். 3 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் இப்படம் 2026 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் 5 ஆவது பாகம் முடிந்த பின் யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு