பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபர்!! -வீதியில் வழிமறித்து தாக்கிய 59 பெண்கள்-

ஆசிரியர் - Editor II
பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபர்!! -வீதியில் வழிமறித்து தாக்கிய 59 பெண்கள்-

கேரள மாநிலம் திருச்சூரில் மாவட்டத்தில் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர் மீது 59 பெண்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் உள்ள முரியாட்டை சேர்ந்த ஷாஜி என்பவர் அண்மையில் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஷாஜி மீது அந்தப் பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஷாஜி தனது மனைவி ஆஷ்லின், மகன் சாஜன் ஆகியோருடன் காரில் வருவதை பார்த்த எம்பரர் இம்மானுவேல் ரிட்ரீட் மையத்தின் பெண்கள் 59 பேர், காரை மறித்து ஷாஜி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

மேலும் ஷாஜியின் மகன் மற்றும் மனைவி மீதும் அவர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காரை மறித்து ஷாஜி மீது தாக்குதல் நடத்திய 59 பெண்களில் 11 பேரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு