இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி!! -91 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது-

ஆசிரியர் - Editor II
இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி!! -91 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது-

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் இறுதி ரி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரி மாற்றத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் ஜாதவ் 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை அடித்திருந்தார்.

229 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறியது.

இலங்கை அணி சார்பில் அதிக பட்சமாக அனித்தலைவர் சானக்க 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்திய அணி சார்பில் அனைத்து பந்து வீச்சாளரகளும் திறமையாக பந்து வீசியிருந்தனர்.

இதன்படி 16.4 பந்துப் பரிமாற்றங்களில் இலங்கை அணி 137 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு