விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது

ஆசிரியர் - Editor II
விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது

ஏர் இந்தியா விமானத்தில், 70 வயது பெண் பயணி மீது, மது போதையில் இருந்த ஷங்கர் மிஸ்ரா என்ற சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஷங்கர் மிஸ்ராவை டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி புறப்பட்டது. 

அப்போது, ' சக பயணி ஒருவர் மது போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்த முறைப்பாட்டில், அந்த சக பயணி, ஷங்கர் மிஸ்ரா என தெரியவந்தது.

இந்த விவகாரத்தை ஏர் இந்தியா ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டில்லி பொலிஸார் விசாரணை நடத்தியதில், சிறு நீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பதுதெரியவந்தது.

அவருக்கு டில்லி பொலிஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ராவை டில்லி பொலிஸார் கைது செய்தனர். இவர் இன்று வெள்ளிக்கிழமை பாட்டிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதற்கிடையே போதை ஆசாமி ஷங்கர் மிஸ்ரா பணியாற்றி வரும் ''வெல்ஸ் பார்கோ '' என்ற பன்னாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. ஷங்கர் மிஸ்ராவின் செயல் அநாரீகமானது, இது தங்களின் நிறுவனத்திற்கு பெரும் அவமானம் என கருதி ஷங்கர் மிஸ்ராவை பணி நீக்கம் செய்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு