போர் நிறுத்த அழைப்பு விடுத்த ரஷியா!! -அழைப்பை நிராகரித்தது உக்ரைன்-

ஆசிரியர் - Editor II
போர் நிறுத்த அழைப்பு விடுத்த ரஷியா!! -அழைப்பை நிராகரித்தது உக்ரைன்-

உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நாளை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

இதனையடுத்து 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய ஜனாதிபதி புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்மஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. போர் ஆரம்பித்த பின் முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷியா வெளியிட்டுள்ளது. 

ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது;-

உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். 

போர் முடிவு பிரகடனம் ரஷியாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷியாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு