வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து வீசி கொன்ற குரங்கு

ஆசிரியர் - Editor II
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து வீசி கொன்ற குரங்கு

உத்தர பிரதேசத்தில் தொட்டிலில் தூங்கிங் கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை தூக்கி சென்ற குரங்கு மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் வசித்து வரும் விஷ்வேஷ்வர் சர்மா என்பவருக்கு 2 மாத குழந்தை ஒன்று உள்ளது.

அக்குழந்தை கடந்த செவ்வாய் கிழமை தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது. இதன் போது அந்த வழியே குரங்குகள் கூட்டம் ஒன்று வந்துள்ளது. 

அதில், ஒரு குரங்கு வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறி உள்ளது. குழந்தையை இழுத்து சென்றதில் அது வலியில் அழுதுள்ளது. அதன் அழுகை சத்தம் கேட்டதும் விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்துள்ளனர். 

ஆனால், அதற்குள் குரங்கு மேற்கூரை பகுதிக்கு சென்று விட்டது. இவர்களும் அதன் பின்னே சென்றுள்ளனர். குழந்தையை பாதுகாக்கும் முயற்சியாக குரங்கை பயமுறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். ஆனால், அது பலன் தரவில்லை. 

இந்நிலையில், மேற்கூரைக்கு சென்ற குரங்கு குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளது. இதில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு திந்த்வாரி பகுதியில் உள்ள குடும்ப நல மையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு