திடீரென மும்பை வைத்தியசாலைக்கு மாற்றப்பட ரிஷப் பண்ட்

ஆசிரியர் - Editor II
திடீரென மும்பை வைத்தியசாலைக்கு மாற்றப்பட ரிஷப் பண்ட்

கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மேலதிக சிகிச்சைக்காக மும்பை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளரும் ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கினார். 

அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் ரூர்கியில் உள்ள வைத்தியசாலையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். 

இந்த நிலையில் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு