கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து பெண் மீது சரமாரி கத்தி குத்து!!

ஆசிரியர் - Editor II
கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து பெண் மீது சரமாரி கத்தி குத்து!!

பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜனகுண்டே பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் லயசீதா என்ற 19 வயது மாணவி மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோலார் மாவட்டத்தில் முலபாகல் அருகே காஜிபுரா கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவி தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், அண்மையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் லயசிதாவை கல்லூரியில் பார்க்க வந்த பவன் கல்யாண் என்ற இளைஞர், வகுப்பறையில் இருந்த லயசிதாவிடம் பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, பவன் கல்யாண் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லயசிதாவை சரமாரியாக குத்தி இருக்கிறார்.

பின் தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் கல்லூரியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருவரையும் சோதித்த வைத்தியர்கள் லயசிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பவன் கல்யாண்  மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கத்தி குத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கல்லூரிக்கு விரைந்து வந்த பொலிஸார் இடத்தை பார்வையிட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

இளைஞரின் இந்த வெறிச் செயலுக்கு தெளிவான காரணம் தெரியாத நிலையில், காதல் விவகாரத்தில் இந்த கொலை மற்றும் தற்கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு