அறிமுக போட்டியில் அசத்திய ஷிவம் மவி!! -முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி-

ஆசிரியர் - Editor II
அறிமுக போட்டியில் அசத்திய ஷிவம் மவி!! -முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி-

இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ரி-20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை சேர்த்தது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா 29 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை சேர்த்ததால் இந்தியா அணி

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிகளை கொடுத்தனர்.

 ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா(1), தனஞ்செய டி சில்வா (8) ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தார். ஷிவம் மவி. 

அதன்பின்னரும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா 12 ஓட்டங்களுடனும், குஷால் மென்டிஸ் 28 ஓட்டங்களுடனும், பனுகா ராஜபக்சே 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

அணித்தலைவர் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹசரங்கா 21 ஓட்டங்களுடனும், தசுன் சனகா 45 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.

இறுதி பந்துப் பரிமாற்றத்தில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அக்சர் பட்டேல் வீசிய அந்த பந்துப் பரிமாற்றத்தை எதிர்கொண்ட கருணாரத்னே, 3 ஆவது பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால் 5 ஆவது பந்தில் கசுன் ரஜிதா ஓட்டம் பெற முயன்ற போது ஆட்டமிழந்தமை நம்பிக்கை தகர்ந்தது. கடைசி பந்தில் 4 ஓட்டம் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தில் கருணாரத்னே ஒரு ஓட்டம் எடுத்து, இரண்டாவது ஓட்டம் பெற முயற்சித்த போது மறுமுனையில் தில்சன் ஆட்டமிழந்தார்.

இதனால், இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து. கருணாரத்னே 23 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்தியா 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு