இலங்கை – இந்தியா தொடரில் சங்கக்கார

ஆசிரியர் - Editor II
இலங்கை – இந்தியா தொடரில் சங்கக்கார

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடர் போட்டி வர்ணணையாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள வர்ணணையளார்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார இடம்பெற்றுள்ளார்

குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் இங்கிலாந்தின் மெரில்போன் (MCC) கழகத்தின் தலைவராக செயற்பட்டுவந்தார். அதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, குறித்த பதவியில் தொடர்ந்தும் நீடிக்கிறார்.

அதுமாத்திரமின்றி ஐ.சி.சி.யின் முக்கியமான தொடர்கள் மற்றும் இலங்கை அணி விளையாடும் ஒருசில தொடர்களில் கிரிக்கெட் வர்ணணையாளராகவும் செயற்பட்டுவந்தார். இந்தவரியைில் தற்போது இலங்கை – இந்திய தொடரில் வர்ணணையளாராக பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த குமார் சங்கக்கார மாத்திரம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷ போக்லே, முரளி காரத்திக், தீப் தேசகுப்தா மற்றும் அஜித் அகாகர் ஆகிய இந்தியர்கள் வர்ணணையளாராக இணைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ரி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு