ஆடையில்லாமல் வீதியில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!!

ஆசிரியர் - Editor II
ஆடையில்லாமல் வீதியில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!!

இந்தியா - டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதில், அவரது உடல் சில கிலோ மீற்றர் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.

டெல்லியின் சுல்தான்புரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது.

காரில் சென்றவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். குறித்த இளம்பெண் 7-8 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடல் காஞ்சவாலா பகுதியில் ஆடையில்லாமல் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பெண்ணின் உடலை மீட்ட பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது விபத்தை ஏற்படுத்தியதாக ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இளம்பெண்ணொருவர் சாலையில் ஆடைகளின்றி சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு