ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்காத 5 வயது குழந்தை!! -அடித்து கையை முறித்த டியூஷன் ஆசிரியர் கைது-

ஆசிரியர் - Editor II
ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்காத 5 வயது குழந்தை!! -அடித்து கையை முறித்த டியூஷன் ஆசிரியர் கைது-

ஆங்கிலத்தில் கிளி என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாத 5 வயது பெண் குழந்தையை அடித்து காய் எலும்பை முறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்திய மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த பகுதியில் உள்ள  தனியார் டியூஷன் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் 'Parrot' என்ற ஆங்கில வார்த்தையை சரியாக உச்சரிக்காததால், கையை முறுக்கியதில் 5 வயது சிறுமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் செவ்வாய்கிழமை இடம்பெற்றதைத் தொடர்ந்து 22 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்திற்குப் பின்னர் சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை சிகிச்சை முடித்து வெளியேறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு