மெஸ்ஸியின் காரை முற்றுகையிட்ட ரசிகர்கள்!! -சொந்த ஊரில் திக்குமுக்காடிய சம்பவம்-

ஆசிரியர் - Editor II
மெஸ்ஸியின் காரை முற்றுகையிட்ட ரசிகர்கள்!! -சொந்த ஊரில் திக்குமுக்காடிய சம்பவம்-

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவில் உள்ள தனது சொந்த ஊரில் பிறந்தநாள் விழாவிற்கு சென்று கொண்டிருந்த போது அவரின் காரை, ரசிகர்கள் சுற்றிவளைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனை தனது மனைவியுடன் காருக்குள் அமர்ந்தபடி பார்த்து மெஸ்ஸி திக்குமுக்காடிப்போயுள்ளார்.

அர்ஜென்டினாவில் மெஸ்ஸியை விட பெரிய நட்சத்திரம், பிரபலம் என்று யாரும் இல்லை எனும் அளவிற்கு, அந்நாட்டு மக்கள் அவரை கிட்டத்தட்ட ஒரு கடவுளைப்போல பார்க்கின்றனர். அவர் எங்கு சென்றாலும் வீதிகளில் குறிப்பாக அவரது ஊரில் ஆயிரக்கணக்கில் கும்பல் குவிந்துவிடும்.

அதிலும் அவர் தற்போது அர்ஜென்டினாவுக்கு 36 வருடங்களுக்கு பின்னர் ஒரு மறக்கமுடியாத உலகக்கோப்பையை வென்று கொடுத்ததால் அவரது புகழ் இப்போது அதிக உயரத்தில் உள்ளது.

உலகக்கோப்பையை வென்ற பின் அண்மையில் சொந்த ஊரான ரொசாரியோவில் (Rosario) மெஸ்ஸி தனது மருமகளின் 15 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார். காரில் மெஸ்ஸியுடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

அப்போது, லியோனல் மெஸ்ஸியின் வாகனத்தின் முன் மக்கள் கடலென திரண்டனர். அவரது பெயரைச் சொல்லிக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்த அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு