400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கோர விபத்து!! -பலர் காயம்-

ஆசிரியர் - Editor II
400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கோர விபத்து!! -பலர் காயம்-

சீனாவில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது.

அந்நாட்டின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள Zhengxin Huanghe பாலத்தில் நேற்று புதன்கிழமை காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கார்கள், டிரக்குகள் என 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி நொறுங்கி கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் மற்றும் வீடியோக்களில் காணமுடிகிறது.

பனிமூட்டத்தால் காலையில் தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66 வீரர்களும் உடனடியாக பாலத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வாகனங்களுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழப்புகள் குறித்து மேலும் விவரங்கள் எதுவும் இல்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு