யாழ்.சாவகச்சேரியில் வீடு உடைத்தைக் கொள்ளை முயற்சி! திருடனை மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்…

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரியில் வீடு உடைத்தைக் கொள்ளை முயற்சி! திருடனை மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்…

யாழ்.சாவகச்சேரி பகுதியில் வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். 

வீட்டவர்கள் நேற்று புதன்கிழமை காலையில் வெளியில்  சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.

அதன்பின்னர் திருடனை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு