உயிரிழந்த கடற்படையினர் நினைவாக யாழில் மர நடுகை

உயிர்நீத்த கடற்படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மரக்கன்றுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடுகை செய்யப்பட்டது.
மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன், மண்டைதீவு கடற்படை முகாம் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது முந்திரி செடிகள் மற்றும் தென்னை என்பன நாட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் மண்டைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.