திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்தவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்து விட்டு பேருந்தில் திரும்பிய திருகோணமலை வாசி , பேருந்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
அன்புவெளிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த குறித்த நபர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு வந்து விட்டு , மீண்டும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் திருகோணமலை நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார்
அதன் போது , சாவகச்சேரி பகுதியை அண்மித்த போது , பேருந்தினுள் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து , அவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.