கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை!! -இளைஞர் தப்பியோட்டம்-

ஆசிரியர் - Editor II
கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை!! -இளைஞர் தப்பியோட்டம்-

இந்தியாவின் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்த சங்கீதா என்னும் கல்லூரி மாணவி நேற்று இரவு வீட்டில் இருந்தார். 

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்களும், அயலவர்களும் அங்கு ஓடி சென்றனர். 

அப்போது இளைஞர் ஒருவர் அங்கிருந்து ஓடி செல்வதை கண்டனர். மேலும் வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

பொலிஸார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 

இதில் சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. அந்த இளைஞர் தான் சங்கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள். 

அந்த இளைஞர் யார்? எதற்காக அவர் சங்கீதாவை கொலை செய்தார் என்பது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு