இலங்கைக்கு எதிரான ரி-20 தொடர்!! -ஹர்திக் பாண்ட்யா அணித்தலைவராக நியமனம்-

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு எதிரான ரி-20 தொடர்!! -ஹர்திக் பாண்ட்யா அணித்தலைவராக நியமனம்-

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ரி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதலாவது ரி-20 போட்டி ஜனவரி 3 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ரி-20 தொடரில் இந்திய அணியின் தலைவராக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ரி-20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

ஹரதிக் பாண்ட்யா (அணித்தலைவர்), சூர்யகுமார் யாதவ் (துணைத்தலைவர்), இஷான் கிஷண், ருத்ராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு