பிரிந்து செல்ல முடிவு செய்த 29 வயது மனைவி!! -கோபத்தில் 63 வயது கணவர் செய்த கொடூர செயல்-

ஆசிரியர் - Editor II
பிரிந்து செல்ல முடிவு செய்த 29 வயது மனைவி!! -கோபத்தில் 63 வயது கணவர் செய்த கொடூர செயல்-

காஸ்டெல்வெட்ரானோவில் வாழ்ந்து வரும் எர்னஸ்டோ பவாரா என்ற 63 வயது கணவர் அவருடைய 29 வயது மனைவி மரியா அமதுசோ தன்னை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மனைவி மரியா சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற சில உடமைகளை எடுத்துச் சென்றதால் அவரை பவாரா கொலை செய்து இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ தினத்தின் போது மரியா தன்னை தாக்கியவரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் பவாரா சமையலறைக் கத்தியால் அவளை 12 முறை தாக்கியதாகவும், இதனால் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட மரியா கொலை செய்யப்பட்டுள்ளார்.

மீனவர் மற்றும் குப்பை வியாபாரியாக பணிபுரிந்து வரும் பவாரா தன்னுடைய 29 வயது இளம் மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு நான்கு வயதுடைய இரட்டை மகள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த குழந்தைகள் காப்பகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வாழ்ந்து வருவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பவாராக்கு முந்தைய திருமணத்திலிருந்து இரு குழந்தைகளும், மரியாவுக்கு முந்தைய திருமணத்திலிருந்து இரு குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் தனது 29 வயது மனைவியை கொலை செய்த 63 வயது கணவர் பவாரா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு