சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவ்வருடம் 223 கோடி வருமானம்

ஆசிரியர் - Editor II
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவ்வருடம் 223 கோடி வருமானம்

இவ் வருடம் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 222 கோடியே 98 இலட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. 

இதில் காணிக்கையாக 70 கோடியே 10 இலட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது. மேலும் 29 இலட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள். இவ்வாறு அவர் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு