பலமாக திருப்பியடித்த தென் கொரியா!! -அதிர்ந்து போன வடகொரியா-

ஆசிரியர் - Editor II
பலமாக திருப்பியடித்த தென் கொரியா!! -அதிர்ந்து போன வடகொரியா-

தமது எல்லைக்குள் ஊடுரிவிய வடகொரியாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தென் கொரிய தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் பொதுவான, விவாதத்திற்குரிய பகுதியிலேயே வடகொரியாவின் 5 ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக கூறப்படுகிறது. ஆனால் தென் கொரியா குறித்த ட்ரோன்களை சுட்டும் வீழ்த்தியுள்ளது.

இதில் ஒரு ட்ரோன் தலைநகர் சியோலுக்கு மிக அருகாமையில் வட்டமிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இராணுவத்தின் கோரிக்கையை ஏற்று Incheon மற்றும் Gimpo விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்பட இடைநிறுத்தப்பட்டது.

சுட்டு வீழ்த்திய தென் கொரியா

முதலில் விமானத்தில் இருந்து சுட்டு எச்சரிக்கை செய்ததாகவும், பின்னர் ஐந்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தென் கொரியா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு