உள்ளாடையில் தங்கத்தை கடத்திய பெண்!! -விமான நிலையத்தில் கைது-

ஆசிரியர் - Editor II
உள்ளாடையில் தங்கத்தை கடத்திய பெண்!! -விமான நிலையத்தில் கைது-

துபாயில் இருந்து உள்ளாடையில் ஒரு கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்த 19 வயது இளம்பெண் கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு காசர்கோட்டை சேர்ந்த ஷேகலா என்ற 19 வயது இளம்பெண் வந்து இறங்கியுள்ளார்.

விமான நிலையத்தில் ஷேகலாவின் (Shahala) நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை அழைத்து சென்று சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அவர் 1.884 கிலோ தங்கத்தை கடத்தி வந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் அப் பெண்ணின் உடைமைகளை முதலில் சோதனையிட்ட விமான நிலைய அதிகாரிகளுக்கு தங்கம் எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில் மீண்டும் அப் பெண்ணை சோதனையிட்டதில் அவர் தன்னுடைய உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்து 1.884 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு