சீனாவை வாட்டும் கொரோனா!! -உடலை தகனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்-

ஆசிரியர் - Editor II
சீனாவை வாட்டும் கொரோனா!! -உடலை தகனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்-

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. இந்த நிலையில் அங்கு தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எத்தனை பேர் கொரோனாவால் இறக்கிறார்கள் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை.

இந்த சூழலில் அந்நாட்டில் தினமும் ஏறத்தாழ 10 இலட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள், 5,000க்கும் மேற்பட்டோர் தினமும் பலியாகிறார்கள் என்று இலண்டனைச் சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் 'ஏர்பினிட்டி' கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள தகனங்களுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் மக்ள் காத்திருப்பதைக் காணக்கூடிய ஒரு திகிலூட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

 டுவிட்டரில் சுகாதார நிபுணர் எரிக் பீகல்-டிங் பகிர்ந்த வீடியோவில், குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடலை தகனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்து எடுத்துச் செல்லும் இதயத்தை உலுக்கும் காட்சிகளைக் காட்டுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு