கடைக்குள் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு வர்த்தகர் கொலை! பிரேத பரிசோதனையில் கொலை அம்பலம்..

ஆசிரியர் - Editor I
கடைக்குள் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு வர்த்தகர் கொலை! பிரேத பரிசோதனையில் கொலை அம்பலம்..

முள்ளியவளை - நீராவிப்பிட்டி பகுதியில் கடை ஒன்றை நடத்திவந்த வர்த்தகர் தனது கடைக்குள் இறந்த நிலையில் கடந்த 22ம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இ

ந்நிலையில் சடலத்தின் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது. 

சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையின் பின்னர் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். 

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின்போது 

அவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸாரும் அழைக்கப்பட்டு தடயங்கள் திரட்டப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு