விமான பணிப்பெண் வேலைக்கு இணைய வழியாக போலி நேர்காணல்! பாலியல் லஞ்சம்கோரிய அரச ஊழியர் கைது..

ஆசிரியர் - Editor I
விமான பணிப்பெண் வேலைக்கு இணைய வழியாக போலி நேர்காணல்! பாலியல் லஞ்சம்கோரிய அரச ஊழியர் கைது..

விமான பணிப்பெண் வேலையை பெற்றுக் கொடுப்பதாக கூறி இணைய வழியாக நேர்காணல் நடத்திய நபர் குறித்த நேர்காணலில் கலந்துகொண்ட பெண்களை நிர்வாணப்படுத்தியதுடன், அந்த புகைப்படங்களை எடுத்து அதனை பயன்படுத்தி பாலியல் லஞ்சம்கோரிய நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹங்குரான்கெத்த பிரதேசத்தில் வசிக்கும் நீர் வழங்கல் சபையின் மின்மானி வாசிப்பவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துக்கு முகங்கொடுத்த மாத்தளை மற்றும் கண்டியில் வசிக்கும் இரண்டு யுவதிகளிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சதுரி திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன் நான்கு கையடக்கத் தொலைபேசிகள், 13 சிம் அட்டைகள் மற்றும் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு