கணவரை கொலை செய்த மனைவி!! -கொலையை மறைக்க சடலத்துடன் படுத்துறங்கிய மனைவி-

ஆசிரியர் - Editor II
கணவரை கொலை செய்த மனைவி!! -கொலையை மறைக்க சடலத்துடன் படுத்துறங்கிய மனைவி-

மதுபோதையில் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, அதை மறைக்க அவரது அருகிலேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் வசித்து வந்த அதுல் என்பவரின் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ தினமன்று ஆத்திரமடைந்த அன்னு கல்லைக் கொண்டு கணவர் அதுலை பலமாக தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதன் பின்னர் கொலையை மறைக்க கணவர் உடலின் அருகிலேயே அன்னு படுத்து உறங்கினார்.

மறுநாள் குழந்தைகளிடம் தந்தையை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு, வேலைக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் வீடு திரும்பியதும் இரவு உணவை தயாரித்த அன்னு, குழந்தைகள் தூங்கியதும் அதுலின் உடலை இழுத்து சென்று வீட்டு வாசலில் போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.

அடுத்த நாள் காலையில் கத்தி கூச்சலிட்டு, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அதுலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அன்னுவின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் பொலிஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு