ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசை கலைஞர்/ நகைச்சுவை நாடக கலைஞர் அச்சுவேலியூர் விஜயநாதன் இறைபதமடைந்தார்..

ஆசிரியர் - Editor I
ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசை கலைஞர்/ நகைச்சுவை நாடக கலைஞர் அச்சுவேலியூர் விஜயநாதன் இறைபதமடைந்தார்..

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்) இறைபதமடைந்துள்ளார். 

அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய வீட்டில் நடைபெற்று இன்று மாலை இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது. 

அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக்கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்னகலைவானர் சின்னமனியுடன் இணைந்து விஜயநாதன்,

ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும் நகைச்சுவையுடன் இணைந்து இலகுவாக சமூகத்திற்கு செய்தியை எடுத்துசொல்லும் கலைஞராகவும் நாடகம் வில்லிசையென 

சுமார் 1000ற்கும் அதிகமான அரங்குகளில் மேடையறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு