அர்ஜென்டினா வெற்றி!! -1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய ரசிகர்-

ஆசிரியர் - Editor II
அர்ஜென்டினா வெற்றி!! -1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய ரசிகர்-

இந்தியாவில் ஏனைய மாநிலங்களை விடவும் கால்பந்து விளையாட்டை கேரள ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். இதனால் காலபந்தாட்டத்தில் பிரபலமிக்க வீரர்களான மெஸ்சி, ரொனால்டோ, நெய்மார் உள்ள அணிகளின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். 

அதன்படி உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்சை தோற்கடித்து அர்ஜென்டினா அணி கைப்பற்றியதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் ரசிகர்கள் ஊர்வலமாக சென்றும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் திருச்சூரை சேர்ந்த ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஷிபு என்பவர் தீவிர அர்ஜென்டினா நாட்டு ரசிகராவார். 

எனவே போட்டிக்கு முன்பு அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றினால் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்று திங்கட்கிழமை உற்சாகமாக பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி வெற்றியை கொண்டாடினார். 

இதனால் ஓட்டல் முன்பு கூட்டம் அலைமோதியது. இதேபோல் கோழிக்கோடு பகுதியில் ஷாகுல் மற்றும் அவரது நண்பர்கள் 100 கிலோ அல்வாவை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு