சமுர்த்தி கொடுப்பனவு பெற சென்றிருந்த மூதாட்டியின் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை! யாழ்.காரைநகரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சமுர்த்தி கொடுப்பனவு பெற சென்றிருந்த மூதாட்டியின் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை! யாழ்.காரைநகரில் சம்பவம்..

யாழ்.காரைநகர் - களபூமியில் வீடு ஒன்றை உடைத்து சுமார் மூன்றரை பவுண் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

வீட்டில் தனிமையிலிருந்த 72 வயதான மூதாட்டி சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதற்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு