இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்!

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்!

யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு கடற்பகுதியில் தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்ட 104 அகதிகளும் நேற்று இரவு 8மணியளவில் யாழ்.மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். 

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்.சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். 

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது,

நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் மீட்டதுடன்,

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துவந்து மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கேயே தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்.சிறைச்சாலைக்குமாற்றப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு