பல்கலைகழகங்களுக்கு தொிவான மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
பல்கலைகழகங்களுக்கு தொிவான மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பல்கலைகழகங்களுக்கு தொிவான மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று தொடக்கம் ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

SMS மற்றும் மின்னஞ்சலூடாக மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசித்து மாணவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு