யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா பாக்கு வியாபாரம்! பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கிய வியாபாரி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா பாக்கு வியாபாரம்! பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கிய வியாபாரி...

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா பாக்கு விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 கிலோ 500 கிராம் மாவா பாக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து  பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 

3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும், 

தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு