காணாமல் ஆக்கப்பட்ட மகனை 26 வருடங்களாக தேடி அலைந்த தாய், இறுதிவரை காணமுடியாமல் உயிரிழந்த துயரம்..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்ட மகனை 26 வருடங்களாக தேடி அலைந்த தாய், இறுதிவரை காணமுடியாமல் உயிரிழந்த துயரம்..!

கடந்த 1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போன மகனைத்தேடியலைந்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நிலையில் 

அவர்களது பிள்ளைகளை காண்பது என்பது அவர்களுக்கு கடைசிவரை கனவாகவே அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு