வீடு புகுந்து வயோதிப தம்பதியை மூர்க்கத்தனமாக தாக்கி 50 பவுண் நகை கொள்ளை!

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து வயோதிப தம்பதியை மூர்க்கத்தனமாக தாக்கி 50 பவுண் நகை கொள்ளை!

மன்னார் - நானாட்டான் உமநகரி கிராமத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த வயோதிப தம்பதியை அச்சுறுத்தி, தாக்கி 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 30 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. 

நேற்று அதிகாலை 2.00 மணியளவில் மூன்று திருடர்கள் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து தம்பதியினர் இருவரையும் சரமாரியாக தாக்கி திருட்டை மேற்கொண்டு தப்பித்துள்ளனர். 

இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் - முருங்கன் பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதேவேளை சில வருடங்களுக்கு முன்பும் இந்த வீட்டியல் திருட்டு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு