யாழ்.சாவகச்சோி சிவன் கோவில் விதியில் முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி சிவன் கோவில் விதியில் முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

யாழ்.சாவகச்சோி சிவன் கோவில் வீதியில் 8 அடி நீளமான பாரிய முதலை ஒன்றிணை பிரதேச மக்கள் உயிருடன் பிடித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை கொன்று தின்றுவிட்டு குறித்த விடுதியின் வளாகத்திலேயே இருந்துள்ளது. 

இதனை அவதானித்த பொதுமக்கள் முதலையை பிடித்து கட்டிவைத்ததுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்குவந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்

முதலையை மீட்டுச் சென்றுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு