மாலைதீவில் வேலைவாய்ப்பு! ஒரே இடத்தை சேர்ந்த 197 போிடம் 84 லட்சம் ரூபாயை சுருட்டிய தரகர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
மாலைதீவில் வேலைவாய்ப்பு! ஒரே இடத்தை சேர்ந்த 197 போிடம் 84 லட்சம் ரூபாயை சுருட்டிய தரகர் தலைமறைவு..

மாலைதீவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி ஒரே இடத்தை சேர்ந்த 197 தோட்டத் தொழிலாளர்களிடம் 84 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய நபர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பக்கப்பட்டுள்ளது. 

மாலைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சுற்றுலா விடுதிகளின் பணிக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாக கூறி பிளாக்வாட்டர்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 197 தோட்டத் தொழிலாளர்களிடம் குறித்த பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி மீண்டும் தோட்டத்துக்கு வந்த தரகர், நவம்பர் 15ஆம் திகதி தம்மை மாலைதீவுக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் அதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி குறித்த தொழிலாளர்களிடம் கூறி ஒரு தொகையை வசூலித்துள்ளார். 

இதன்படி, தலா 12,500 ரூபா பெற்றுக்கொண்ட குறித்த தரகர், தோட்ட தொழிலாளர்களை மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையிலேயே அதன் பின்னர் குறித்த தரகர் தலைமறைவாகியதாகவும் பொலிஸில் முறைப்பாட செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு